Credits
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
S.P. Balasubrahmanyam
Performer
Mohan
Actor
Jayasri
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Vaalee
Lyrics
Lyrics
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ
மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ
கலக்கம் அல்லவோ
என்ன சொல்லவோ
மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ
கலக்கம் அல்லவோ
தள்ளாடும் தேகங்களே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் வா
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
காதல் கொண்டதோ சொல்
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம்
இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும்
எடுப்பதென்னவோ
என்னை உன்னிடம்
இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும்
எடுப்பதென்னவோ
தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும்
என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ
சேதி சொன்னதோ
தூது வந்ததோ
சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
Written by: Ilaiyaraaja, Vaalee