Letras
[Chorus]
எப்போ நீ என்ன பார்ப்ப
எப்போ என் பேச்ச கேப்ப
எப்போ நான் பேச கெட்ட பையா
எப்போடா கோவம் குறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச கெட்ட பையா
[Chorus]
எப்போ நீ என்ன பார்ப்ப
எப்போ என் பேச்ச கேப்ப
எப்போ நான் பேச கெட்ட பையா
எப்போடா கோவம் குறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச கெட்ட பையா
[Verse 1]
நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறேன்
ஒரு செல்ல நாயாய்
உந்தன் முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம்
தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும்
திரும்பி பார்ப்பாயா?
[Verse 2]
கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயமில்லை நீ வா
மலையை சுமக்கிற பலம் உனக்கு
மலரை ரசிக்கிற மனம் உனக்கு
இனிமேல் எப்போதும் நீ எனக்கு நீ வா
உன் துணை தேடி
நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோவம் கூட நியாயம் என்று ரசித்தேனடா
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் ஒளிபெற்றே வாழ்வேனடா
அட என்னை தவிர
எல்லா பெரும் ஆணை ஆனாலும்
நான் உனக்கு மட்டும்
சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்ற சொல்லே வேணாம்டா!
[Verse 3]
எரிமலை கண்கள் ரெண்டு
பனிமலை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா
பூமியில் ஆம்பலை என்று
உன்னை தான் சொல்வேன் இன்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா
உன்னாலே அச்சமின்றி நான் வாழரேன்
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதடா
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா?
Written by: G. V. Prakash Kumar, Snehan

