Crédits

INTERPRÉTATION
T. M. Soundararajan
T. M. Soundararajan
Voix principales
COMPOSITION ET PAROLES
Viswanathan - Ramamoorthy
Viswanathan - Ramamoorthy
Composition
Kannadasan
Kannadasan
Paroles/Composition

Paroles

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் பணம்தனை படைத்தான்
எதனை கண்டான் பணம்தனை படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
Written by: Kannadasan, Viswanathan - Ramamoorthy
instagramSharePathic_arrow_out

Loading...