Crédits

INTERPRÉTATION
Mano
Mano
Interprète
Bhavatharani
Bhavatharani
Interprète
COMPOSITION ET PAROLES
Vairamuthu
Vairamuthu
Paroles/Composition
Deva
Deva
Composition

Paroles

மனமே திகைக்காதே
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாதி கிடக்கும்
எப்போவும் கிடக்கும் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில்
இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை
எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில்
உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை
எவர் கண்டார்
மனமே திகைக்காதே
இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மாலை வந்து சேருமுன்னே
பிள்ளை வரலாம் எவர் கண்டார்
அத்து மீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாதி கிடக்கும்
எப்போவும் கிடக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
என் தூக்கத்தையும் நீ திருடலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
நீ கண்களைக் கைதும் செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மோகம் வந்தால் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்
உன்னைவிட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாதி கிடக்கும்
எப்போவும் கிடக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில்
இருவிழி நிலைத்ததை
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில்
உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை
எவர் கண்டார்
Written by: Deva, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...