Crédits
INTERPRÉTATION
Hariharan
Interprète
Ajith
Interprétation
COMPOSITION ET PAROLES
Vairamuthu
Paroles/Composition
Deva
Composition
Paroles
செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும் கலைமானா
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா
செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா
இருளைப் பின்னிய குழலோ
இருவிழிகள் நிலவின் நிழலோ
பொன் உதடுகளின் சிறுவரியில்
என் உயிரைப் புதைப்பாளோ
ரவிவர்மன் தூரிகை எழுத்தோ
இல்லை சங்கில் ஊறிய கழுத்தோ
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்
நான் உருண்டிட மாட்டேனோ
பூமி கொண்ட பூவையெல்லாம்
இரு பந்தாய் செய்தது யார் செயலோ
சின்ன ஓவியச் சிற்றிடையோ அவள் சேலை கட்டிய சிறுபுயலோ
என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள்
அவை மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்
செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா
அவளே என் துணையானால்
என் ஆவியை உடையாய் நெய்வேன்
அவள் மேனியில் உடையாய்த் தழுவி
பல மெல்லிய இடம் தொடுவேன்
மார்கழி மாதத்து இரவில்
என் மாங்கனி குளிர்கிற பொழுதில்
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்
மோகம் தீர்க்கும் முதலிரவில்
ஒரு மேகமெத்தை நான் தருவேன்
மாதம் இரண்டில் மசக்கை வந்தால்
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்
அவள் நடந்தாலோ இடை அதிர்ந்தாலோ
குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவேன்
செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும் கலைமானா
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா
செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா
Written by: Deva, Vairamuthu

