Muziekvideo
Muziekvideo
Credits
PERFORMING ARTISTS
Haricharan
Lead Vocals
Joshua Sridhar
Performer
Na. Muthukumar
Performer
Bharath
Actor
Sandhya
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Na. Muthukumar
Songwriter
Harris Jayaraj
Composer
Joshva Sridar
Composer
Yuvan Shankar Raja
Composer
PRODUCTION & ENGINEERING
S Pictures
Producer
Songteksten
உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே
கண்மணியே
அழுவதேன்
கண்மணியே
வழித்துணை நான் இருக்க
உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும் கண்மணி
காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா
கல்லறை மீது தான் பூத்த பூக்கள் என்று தான்
வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா
மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளை தாண்டும்
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வரும் காலம் காயம் ஆற்றும்
நிலவொளியை மட்டும் நம்பி
இலை எல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிா்ப்பேன்
வெந்நீரில் நீர் குளிப்பேன்
விறகாகி தீ குளிப்பேன்
உதிரத்தில் உன்னை கலப்பேன்
விழி மூடும் போதும் உன்னை
பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்
நான் என்றால் நானே இல்லை
நீ தானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்
உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே
கண்மணியே
அழுவதேன்
கண்மணியே
வழித்துணை நான் இருக்க (ஹு-ஹு-யோ)
வழித்துணை நான் இருக்க (ஹு-ஹு-யோ)
வழித்துணை நான் இருக்க (ஹு-ஹு-யோ)
வழித்துணை நான் இருக்க (ஹு-ஹு-யோ)
Written by: A. R. Rahman, Harris Jayaraj, Joshva Sridar, Na. Muthukumar, Yuvan Shankar Raja


