Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Srinivas
Performer
Mahalakshmi
Performer
COMPOSITION & LYRICS
Na Muthukumar
Songwriter
Tekst Utworu
வினோதனே வினோதனே
விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில்
கொட்டும் மழையை போலவே
மனதிலே காதலின் சாரல் அடிக்கிறதே
வினோதனே வினோதனே
விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
ஓவிய பெண்ணே தூரிகையாலே
சூரியன் என்னை சிறை எடுத்தாய்
மாபெரும் மலைகள் ஆயினும் கூட
மல்லிகை பூக்கள் உடைத்திடுமே
உன்னை தினம் சுமப்பதால்
போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால்
மயக்கம் பிறக்கின்றதோ...
வினோதனே வினோதனே
விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
விறகென இருந்தேன் இதழ்களில் செதுக்கி
புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்
அழகே நீதான் அதிசய விளக்கு
அணைக்கும் போது எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களே
கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே
சிங்கத்தை பிடிக்கின்றாய்...
வினோதனே வினோதனே
விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில்
கொட்டும் மழையை போலவே
மனதிலே காதலின் சாரல் அடிக்கிறதே
விநோதன் நான் விநோதன் நான்
விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
விநோதன் நான் விநோதன் நான்
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
Written by: Na Muthukumar