Créditos

INTERPRETAÇÃO
P. Susheela
P. Susheela
Interpretação
COMPOSIÇÃO E LETRA
V. Kumar
V. Kumar
Composição
Vaalee
Vaalee
Composição

Letra

ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின்
பாதையில் செல்ல
உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின்
பாதையில் செல்ல
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம்
விட்டு செல்லடி என்றது ஆசை
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
செக்க சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன
செந்நிற இதழ்கள்
செக்க சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன
செந்நிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
உன்னிடம் சொல்லிட நினைக்கும்
மனம் உண்மையை மூடி மறைக்கும்
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
Written by: V. Kumar, Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...