யாரும் காணாத விண்மீனே
மனம் காணும் பூந்தருணம்
சந்தம் சிந்தும் சாரல் போலே
விழும் கண்ணே உன் மெளனம்
யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே
யாரும் காணாத கண்ணீரே
உனை தாங்கும் என் நெஞ்சம்
பாதை இனிமேல் தீராதே
காதல் பெருந்துணையென வருதே
ஊழை அடடா வேண்டாமே
பேதை நானாகும் யோகம்
இனி தேனில் நடனம்
என் உயிரில் ஆடும் தருணம்
மெய்யே தீரா தாளம்
யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே
யாரும் காணாத விண்மீனே
நேற்றே இனியும் வாராதே
காதல் முடிவிலி என வருதே
யாரும் துணையாய் வேண்டாமே
காதல் தாலாட்டும் தாயின் மடி
தேடல் விரதம்
உன் விழியின் காம்பில் கருகும்
நீயே வாழ்வின் தூரம்
யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே
யாரும் காணாத விண்மீனே