Letra

கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா விடியும் வரையில் போராடினோம் உதிரம் மதியாய் நீராடினோம் வெக்கலெல்லாம் வாளாச்சு துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா, கண்ணம்மா... நம்ம வாசல் தேடி சாரல் வரும் இது வானம் தூவும் தூறல் வரும் வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் இப்பக் கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம் கண்களால் கன்னத்தில் போட இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்கு நீ அங்கு நான் போராட உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன் தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன் நானோர் தீவாய் ஆனேன் வா வா அம்மம்மா நாளெல்லாம் காணல் நீரைக் குடித்தேன் இப்பக் கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன் உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன் மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு உன்னில் என்னைக் கரைப்பேன் இப்பக் கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா விடியும் வரையில் போராடினோம் உதிரம் மதியாய் நீராடினோம் வெக்கலெல்லாம் வாளாச்சு துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா, கண்ணம்மா... நம்ம வாசல் தேடி சாரல் வரும் இது வானம் தூவும் தூறல் வரும் வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்
Writer(s): Vaali, Rahman A R Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out