Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
T. M. Soundararajan
Voix principales
COMPOSITION ET PAROLES
M. S. Viswanathan
Composition
Vaalee
Paroles/Composition
Paroles
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவதெற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விகுறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென்று எண்ணி பிழைக்கும் நமக்காக
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை ஒன்று உண்டு
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதெல்லாம் இறைவனும் தந்ததில்லை
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
Written by: M. S. Viswanathan, Vaalee


