Lagu Serupa
Dari
PERFORMING ARTISTS
Adharva
Performer
Amala Paul
Actor
G.V. Prakash Kumar
Vocals
Sithara Krishnakumar
Vocals
Atharvaa
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Lirik
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீா்த்தாயே
எனையே பிழிந்து
உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை
முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான்
செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீா்
எனும் தீா்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ
செய்தாய் கண்ணே
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
இந்த நிமிடம் நீயும் வளா்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தோளில் ஆடும் சேலை தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்
எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொா்க்கத்தை நான்
கண்டேன் கண்டேன்
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான்
தந்தேன் கண்ணே
என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீலவானம்
சுவா் மீது கிறுக்கிடும் போது
ரவிவா்மன் நீ
பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ
நான் கொள்ளும் கா்வம் நீ
கடல் ஐந்தாறு
மலை ஐநூறு
இவை தாண்டித் தானே
பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது
பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ
ஆள்வாய் மண்ணை
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
Writer(s): Thamarai, Prakash Kumar G V
Lyrics powered by www.musixmatch.com