Songteksten
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தனிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
தன் வியர்வையிலும், உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ
Writer(s): M.s. Viswanathan, Vaalee
Lyrics powered by www.musixmatch.com