Credits
PERFORMING ARTISTS
K.S. Chithra
Vocals
Hariharan
Vocals
COMPOSITION & LYRICS
Nandalala
Songwriter
Songteksten
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைப்போல
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
நெல்லு கொட்டி வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வச்சேன் தினம் உன் நெனப்புல
நீயும் இல்லாம நானும் இல்ல
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைப்போல
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
ராசாத்தி நீயும்தான்
பூக்கோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்
சாமிய சந்திச்சா
என் ஆயுள் காலத்தை
உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்
தோளுலே ஊஞ்சல் கட்டி
தோகமயிலே தாலாட்டுவேன்
வீசும் காத்த சல்லடையால சரிச்சு தூசி எடுப்பேன்
உனக்கு மூச்சு குடுப்பேன்
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைப்போல
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
முள்ளைப்பூ காம்புதான்
உன் கையை குத்தாதா?
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா?
செம்மண்ணுப் புழுதி
உன் கண்ணில் விழுமே
புழுதிக் காத்தில்லாம பூமி சுத்தாதா?
மூக்குத்தி குத்தாதடி
எனக்கு வலிக்கும் வேணாமடி
உனக்கு வலிச்சா மறுநொடி நானும்
உசுர கையில் எடுப்பேன்
உனக்கு நானும் குடுப்பேன்
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைப்போல
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
நெல்லு கொட்டி வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வச்சேன் தினம் உன் நெனப்புல
நீயும் இல்லாம நானும் இல்ல
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைப்போல
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
Written by: Nandalala

