Tekst Utworu

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி அலை கடலை கடந்த பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது பூமியில் உள்ள பொய்களெல்லாம் ஆட புடவை கட்டி பெண்ணானது புயல் அடித்தால் மழை இருக்கும் மரங்களில் பூக்களும் மறைந்து விடும் சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும் ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை யே கண் பேசும் வார்த்தை... கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை...
Writer(s): Yuvan Shankar Raja, Muthukumar Na Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out