Letra

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னைக்கானவே கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னைத்தேடியே... உன்னை உன்னைத் தாண்டிச்செல்ல கொஞ்சக்காலம், கொஞ்சத்தூரம் கொஞ்ச நேரம்கூட என்னால் ஆகுமோ... உன்னை உன்னை தேடித்தானே இந்த ஏக்கம் இந்தப்பாதை, இந்தப்பயணம் இந்த வார்த்தையானதோ... கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னைத்தேடியே... ஓ... நதியே நீ எங்கே என்று கரைகள் தேடக்கூடாதா நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக்கூடாதா ஓ... மழை இரவினில் குயிலின் கீதம் துடிப்பதை யார் அறிவார் கடல் மடியினில் கிடக்கும் பலரின் கனவுகள் இவர் அறிவார் அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய் உயிரே நீ என்ன செய்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய் அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே பூவின் உள்ளே, நிலவில் மேலே தீயின் கீழே, காற்றின் வெளியே இல்லையே உந்தன் கண்ணில், உந்தன் மூச்சில் உந்தன் இரவில்,உந்தன் நெஞ்சில், உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே ஓ... எனக்கே நான் சுமையாய் மாறி என்னைச்சுமந்து வந்தேனே உனக்கே நான் நிழலாய் மாறி உன்னைத் தேடி வந்தேனே விழி நனைந்திடும் நேரம் காட்ட இமை விலகிவிடாது உயிர் துடித்திடும் உன்னை எந்தன் உயிர் ஒதுக்கிவிடாது உலகம் ஒரு புள்ளியாகுதே நெஞ்சம் எங்கோ மிதந்துப்போகுதே உயிரில் ஒரு பூவெடிக்குதே சுகமோ வலியோ எல்லை மீறுதே சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னைக்கானவே ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க ஒரு இமை மாத்திரம் வலியில் நோக இடையினில் எப்படி கனவும் காணுமோ உன்னை உன்னைத் தாண்டிச்செல்ல கொஞ்சக்காலம், கொஞ்சத்தூரம் கொஞ்ச நேரம்கூட என்னால் ஆகுமோ... உன்னை உன்னை தேடித்தானே இந்த ஏக்கம் இந்தப்பாதை, இந்தப்பயணம் இந்த வார்த்தையானதோ...
Writer(s): Yuvan Shankar Raja, Vijay Pa Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out