Vídeo de música

Vídeo de música

Créditos

PERFORMING ARTISTS
P. Unnikrishnan
P. Unnikrishnan
Performer
Harikumar
Harikumar
Performer
Kannan
Kannan
Performer
COMPOSITION & LYRICS
Tyagaraja
Tyagaraja
Songwriter
C. Rajagopalachari
C. Rajagopalachari
Composer
Subramanya Bharathi
Subramanya Bharathi
Composer

Letra

எந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
எந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
அதன் முந்தையர் ஆயிரம்
ஆண்டுகள் வாழ்ந்து
முந்தையர் ஆயிரம்
ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம்
எண்ணம் வளர்த்து
சிந்தையில் ஆயிரம்
எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே
இதை வந்தனைக் கூறி
மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ?
இதை வந்தனைக் கூறி
மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ?
இதை வந்தே மாதரம்
வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
இதை வந்தே மாதரம்
வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
இன்னுயிர் தந்தெமை
ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே
இன்னுயிர் தந்தெமை
ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே
எங்கள் அன்னையர் தோன்றி
மழலைகள் கூறி
அன்னையர் தோன்றி
மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே
அவர் கன்னியராகி
நிலவினில் ஆடிக்
கன்னியராகி
நிலவினில் ஆடிக்
களித்ததும் இந்நாடே
தங்கள் பொன்னுடல் இன்புற
நீர் விளையாடி
பொன்னுடல் இன்புற
நீர் விளையாடி
இல் போந்ததும் இந்நாடே
இதை வந்தே மாதரம்
வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
மங்கையராய் அவர்
இல்லறம் நன்கு
வளர்த்தும் இந்நாடே
அவர் தங்க மதலைகள்
ஈன்று அமுதூட்டி
தழுவியது இந்நாடே
மக்கள் துங்கம் உயர்ந்து
வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே
மக்கள் துங்கம் உயர்ந்து
வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே
பின்னர் அங்கவர் மாய
அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே
இதை வந்தே மாதரம்
வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
Written by: C. Rajagopalachari, Sri Chandresekhara Saraswati, Subramanya Bharathi, Tyagaraja
instagramSharePathic_arrow_out

Loading...