Создатели
ИСПОЛНИТЕЛИ
T. M. Soundararajan
Исполнитель
МУЗЫКА И СЛОВА
M. S. Viswanathan
Композитор
Kannadasan
Автор песен
Слова
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்தப்பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையென்னும் தொட்டிலிலேஆடாதாரே கண்ணா
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
Written by: Kannadasan, M. S. Viswanathan