Создатели
ИСПОЛНИТЕЛИ
Stephen Zechariah
Исполнитель
Srinisha Jayaseelan
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Stephen Zechariah
Композитор
T. Suriavelan
Автор песен
Слова
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்
உன்னோடு நானும் வாழ, உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா, உன் மடி சாயவா?
உன் பார்வை என்னைக் கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா, நீதான் என் மன்னவா
ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
வேர்வை துளிகளும் தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்துக் கொள்வேன் உயிரிலே
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
இறகைப் போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
உன் பார்வை என்னைக் கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா, நீதான் என் மன்னவா
உன்னோடு நானும் வாழ, உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா, உன் மடி சாயவா?
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்துக் கொள்ளடா உயிரிலே
விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை
அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
இறகைப் போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
நீ இரவல் உயிரா இரவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
உன்னோடு நானும் வாழ, உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா, உன் மடி சாயவா?
உன் பார்வை என்னைக் கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா, நீதான் என் மன்னவா
Writer(s): Stephen Zechariah, T Suria Velan, T. Suriavelan
Lyrics powered by www.musixmatch.com