Lyrics
என் ஜீவன்
உனது குழலாகட்டும் கண்ணா
என் ஜீவன்
உனது குழலாகட்டும் கண்ணா
நீ காட்டும் நாதம்
என் வாழ்வாகட்டும் கண்ணா
நீ காட்டும் நாதம்
என் வாழ்வாகட்டும் கண்ணா
கண்ணா கண்ணா
கோகுலம் தன்னில் நீ
ஆவினம் மேய்த்தால்
நானும் ஓர் கன்றாய்
நாடிடுவேன் உன்னை
கோகுலம் தன்னில் நீ
ஆவினம் மேய்த்தால்
நானும் ஓர் கன்றாய்
நாடிடுவேன் உன்னை
உன் தேவகானம் தன்னில்
முழ்கி நாளும்
என் வாழ்க்கை செல்லும் யமுனையின் ஓரம்
உன் தேவகானம் தன்னில்
முழ்கி நாளும்
என் வாழ்க்கை செல்லும் யமுனையின் ஓரம்
என் ஜீவன்
உனது குழலாகட்டும் கண்ணா
நீ காட்டும் நாதம்
என் வாழ்வாகட்டும் கண்ணா
கண்ணா கண்ணா
கோபியர் சூழும்
பூம்பொழில் தன்னில்
மென்காற்று உந்தன்
இன்னிசை ஏந்தும்
கோபியர் சூழும்
பூம்பொழில் தன்னில்
மென்காற்று உந்தன்
இன்னிசை ஏந்தும்
மானினமாக நான் அங்கு வந்து
உன் பாட்டைக் கேட்டு உன்மத்தம் ஆவேன்
மானினமாக நான் அங்கு வந்து
உன் பாட்டைக் கேட்டு உன்மத்தம் ஆவேன்
என் ஜீவன்
உனது குழலாகட்டும் கண்ணா
நீ காட்டும் நாதம்
என் வாழ்வாகட்டும் கண்ணா
கண்ணா கண்ணா
ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னாலும்
மோகன ரூபனின் லீலைகள் வாழும்
ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னாலும்
மோஹன ரூபனின் லீலைகள் வாழும்
என் பாடல் என்றும்
அவன் பெயரைச் சொல்லும்
அவன் சென்ற பாதை
தன்னில் உள்ளம் செல்லும்
என் பாடல் என்றும்
அவன் பெயரைச் சொல்லும்
அவன் சென்ற பாதை
தன்னில் உள்ளம் செல்லும்
என் ஜீவன்
உனது குழலாகட்டும் கண்ணா
நீ காட்டும் நாதம்
என் வாழ்வாகட்டும் கண்ணா
கண்ணா கண்ணா
Writer(s): Sivaranjan Sivaranjan
Lyrics powered by www.musixmatch.com