Credits

PERFORMING ARTISTS
P. Susheela
P. Susheela
Performer
L. R. Eswari
L. R. Eswari
Performer
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
M. S. Viswanathan
Composer
Vaalee
Vaalee
Songwriter

Lyrics

கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
கடவுள் தந்த இரு மலர்கள்
இரு மலர்கள்
இரு மலர்கள்
காற்றில் உதிர்ந்த வண்ண மலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
காற்றில் உதிர்ந்த வண்ண மலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
பாவை கூந்தல் சேர்ந்த மலர்
பருவம் கண்டு பூத்த மலர்
பாசம் கொண்டு வந்ததம்மா
பரிசாய் தன்னை தந்ததம்மா
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
கடவுள் தந்த இரு மலர்கள்
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை மனம் கொண்டு
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை மனம் கொண்டு
தலையில் இறைவன் சூடிக் கொண்டான்
தானே அதனை சேர்த்துக் கொண்டான்
தலையில் இறைவன் சூடிக் கொண்டான்
தானே அதனை சேர்த்துக் கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும்
கோயில் சேர்ந்த ஒரு மலரும்
இரண்டும் வாழ்வில் பெருமை பெரும்
இதயம் என்றும் அமைதி பெரும்
கடவுள் தந்த இரு மலர்கள்
Written by: M. S. Viswanathan, Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...