Lyrics
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
சின்னமணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ
மஞ்சள் வண்ண நிலவோ மனசில் இத்தனை கனவோ
இந்த நாள் மங்கள நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
நந்தவனக் குயிலே...
நடக்கும் சித்திர மயிலே
சின்னமணிக் கிளியே...
சிரிக்கும் நித்தில மணியே
இந்த நாள் மங்கள நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
தென் மதுரை வீரனுக்கு
என்னுடைய மாமனுக்கு
தேக்கு மர தேகமடி யம்மா... யம்மா
மாமன் பெத்த பெண் உனக்கு
மை எழுதும் கண் எதுக்கு
என்னை வந்து கொல்லுதடி யம்மா... யம்மா
ஆத்துல நான் குளிச்சேன்
ஆசையா நீ புடிச்ச
தோளத்தான் நீ புடிச்ச
சொர்க்கத்த நான் புடிச்சேன்
அடடா ஒரு அங்குலம் அங்குலமாக
நீ ஆசையில் முத்தங்கள் போட
அத என்னன்னு சொல்லுவேன்
எப்படி சொல்லுவேன் நானே
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
ஓ... சின்னமணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ
மஞ்சள் வண்ண நிலவோ மனசில் இத்தனை கனவோ
இந்த நாள் மங்கள நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
கையளவு சின்ன இடை
சொல்லிக்கொடு என்ன விலை
கேட்ட விலை நான் கொடுப்பேன்
கண்ணே கண்ணே
ஆசை அது எவ்வளவு
அள்ளிக் கொடு அவ்வளவு
உன் அளவும் என் அளவும் ஒன்னே ஒன்னே
விண்ணிலே வெண்ணிலவு
வீட்டிலே பெண்ணிலவு
இன்று தான் நல்லிரவு
நான் சொல்லவா நல்வரவு
அடடா இது தண்ணீரில் தாமரையல்ல
இது கன்னியின் தாமரையம்மா
இந்த தாமரை மொட்டுக்கள்
பூப்பதெல்லாம் உனக்காக
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
நந்தவனக் குயிலே
நடக்கும் சித்திர மயிலே
சின்னமணிக் கிளியே
சிரிக்கும் நித்தில மணியே
இந்த நாள் மங்கள நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
Writer(s): Ilayaraja
Lyrics powered by www.musixmatch.com