Credits

COMPOSITION & LYRICS
Janarthanan Pulenthiran
Janarthanan Pulenthiran
Songwriter
Kutti Revathi Suyampu
Kutti Revathi Suyampu
Songwriter

Lyrics

கண்ணாளனே
பாவையிங்கே
முப்போதும் நோன்பில் வேகின்றேன்
சித்த நோய்கொண்டேன்
உன்னாலே சொற்கள் தோற்கின்றேன்
முத்தாரம்போல்
மார்பினிலே
எப்போதும் தொட்டு வாழ்த்திடுவேன்
முத்தம் தாவென்னும்
உன்வாயின் எச்சில் தாவென்றேன்
சொல்லாலே தீராதே
மலர்வாசம் காற்றோடு
பெண்மேலே சேலை
முள்போல தைப்பதேன்
உன்பார்வை தூமலர்
அம்பினைப்போல வீழ
நானிங்கே நீர்மேலே
தெப்பம்போல ஆடினேன்
கைத்தலம் தாராயோ
மன்மதனோயே தீர
நான் இங்கே தேகத்தைக்
கொண்டாடும் ஆணே
கள்ளம் வேண்டாமே கண்கள் மூடாமல்
மிச்சம் வாழவே வா
உள்ளம் மாறாமல் ஒன்றும் பேசாமல்
உச்சம் காணுவோம் நாம்
கண்ணாளனே
பாவையிங்கே
முப்போதும் நோன்பில் வேகின்றேன்
சித்த நோய்கொண்டேன்
உன்னாலே சொற்கள் தோற்கின்றேன்
பேரின்ப கூடலிலே
சேயிழை சேர்ந்திடவே
வேகமாய் ஓடோடிவா
காயத்தின் மோகத்தை
நானிங்கே தாங்கிடவே
மேகமாய் நீராட்டவா
யாதென்றும் வாராதே
தீதென்றும் நேராதே
வேடிக்கை காட்டாதே
நீ ஒன்றும் கேளாதே
ஏன் என்றும் பாராதே
வேதனை கூட்டாதே
எந்தன் மேலே
கண்ணம் வைத்தாய்
கள்ளன் போலே
உள்ளே வந்தாய்
உன்னை நீங்கா அன்றில் ஆவேன்
தண்ணீர் மீதே
எண்ணை ஆனேன்
கள்ளம் வேண்டாமே
கண்கள் மூடாமல்
மிச்சம் வாழவே வா
உள்ளம் மாறாமல்
ஒன்றும் பேசாமல்
உச்சம் காணுவோம் நாம்
கண்ணாளனே
பாவையிங்கே
முப்போதும் நோன்பில் வேகின்றேன்
சித்த நோய்கொண்டேன்
உன்னாலே சொற்கள் தோற்கின்றேன்
தாமரை வாடிடவே
மையலும் நீண்டிடுதே
நீயென்னை தீண்டாய்யய்யா
மாமழை வேண்டியே
பூமியும் பூண்டிடுதே
கோடையின் ஆடையம்மா
பூங்கொத்து நீயாவாய்
நாளொன்றும் வாடாமல்
தோள்தொட்டு வாழாயோ
நீர்விழிகள் ஆறாகும்
நீயென்னைச் சேராமல்
வாழ்விங்கே போராகும்
உள்ளம் நீயே
உள்ளில் சேர்த்தாய்
வள்ளல் போலே
அள்ளிச் சேர்ப்பாய்
என்னில் ஏனோ
ஏக்கம் சேர்த்தாய்
துக்கம் நீக்க
பக்கம் வாராய்
கள்ளம் வேண்டாமே
கண்கள் மூடாமல்
மிச்சம் வாழவே வா
உள்ளம் மாறாமல்
ஒன்றும் பேசாமல்
உச்சம் காணுவோம் நாம்
கண்ணாளனே
பாவையிங்கே
முப்போதும் நோன்பில் வேகின்றேன்
சித்த நோய்கொண்டேன்
உன்னாலே சொற்கள் தோற்கின்றேன்
முத்தாரம்போல்
மார்பினிலே
எப்போதும் தொட்டு வாழ்த்திடுவேன்
முத்தம் தாவென்னும்
உன்வாயின் எச்சில் தாவென்றேன்
சொல்லாலே தீராதே
மலர்வாசம் காற்றோடு
பெண்மேலே சேலை
முள்போல தைப்பதேன்
உன்பார்வை தூமலர்
அம்பினைப்போல வீழ
நானிங்கே நீர்மேலே
தெப்பம்போல ஆடினேன்
கைத்தலம் தாராயோ
மன்மதனோயே தீர
நான் இங்கே தேகத்தைக்
கொண்டாடும் ஆணே
கள்ளம் வேண்டாமே
கண்கள் மூடாமல்
மிச்சம் வாழவே வா
உள்ளம் மாறாமல்
ஒன்றும் பேசாமல்
உச்சம் காணுவோம் நாம்
கள்ளம் வேண்டாமே
கண்கள் மூடாமல்
மிச்சம் வாழவே வா
உள்ளம் மாறாமல்
ஒன்றும் பேசாமல்
உச்சம் காணுவோம் நாம்
Written by: Janarthanan Pulenthiran, Kutti Revathi Suyampu
instagramSharePathic_arrow_out

Loading...