Credits
PERFORMING ARTISTS
P. Susheela
Lead Vocals
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
Composer
Vaalee
Songwriter
Lyrics
பால் போலவே
வான் மீதிலே
யார் காணவே
நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு ஆ
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு
கலைஞன் ஆகினான், கலைஞன் ஆகினான்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு ஆ
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
Written by: M. S. Viswanathan, Vaalee