Lyrics

தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிறியேன் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி தேவன் மகனே தேவன் மகனே சிலுவை காடு பூத்தது போலே சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி என்றோ அடி என்றோ உன் உயிரில் உரிமை தந்தாய் இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய் நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய் அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய் உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டாயே நான் முத்த சாவி போட்டு திறப்பேன் தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி கண்ணீர் என் கண்ணீர் என் கன்னம் காயும் முன்னே பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன் கொடியில் ஒரு கொடியில் இரு இளநீர் காய்க்கும் பெண்ணே மடியில் உன் மடியில் சிறு மரணம் கொண்டேன் என் கர்தரங்கள் படைத்த வேற்ற பாண்டம் நான் அதில் உன்னை ஊற்றி என்னை நிறைத்தாய் தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி தேவன் மகனே தேவன் மகனே சிலுவை காடு பூத்தது போலே சின்னவள் வாழ்வில் பூக்க வைத்தாயே தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிறியேன் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
Writer(s): Vairamuthu, Nr Raghunathan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out