歌词
F-ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - அந்த உறவுக்குப் பெயரென்ன?
M- காதல்
F - அந்த ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால் அந்த உரிமைக்குப் பெயர் என்ன?
M-குடும்பம்
F - நினைத்தவன் அவளை மறந்து விட்டால்அந்த நிலைமையின் முடிவென்ன?
M - துயரம்
F - பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அங்குபெண்மையின் நிலை என்ன?
M -மௌனம்
F - ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்- அந்த உறவுக்குப் பெயரென்ன?
M - காதல்
F - இரவும் பகலும் உன்னுருவம் - அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
இரவும் பகலும் உன்னுருவம் - அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
M - அடக்கம் என்பது பெண்ணுருவம் -அதை அறிந்தால் மறையும் என்னுருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம்
F - மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை
M - நினைக்கும் நிலையிலும் நான் இல்லை-
உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை
F - ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்- அந்த உறவுக்குப் பெயரென்ன?
M - காதல்
F - கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
M - வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
F - கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி
கண்டேன் கண்டது நல்ல வழி - அது காதலன் உடனே செல்லும் வழி
M - சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் - நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்
F - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்- அந்த உறவுக்குப் பெயரென்ன?
M- காதல்
Written by: K. V. Mahadevan, Kannadasan