積分

演出藝人
Balan Devara Swamigal
Balan Devara Swamigal
演出者
Soolamangalam Sisters
Soolamangalam Sisters
聲樂
Karpagadasan
Karpagadasan
演出者
D.V. Ramani
D.V. Ramani
演出者
Rajalakshmi
Rajalakshmi
聲樂
Mano
Mano
聲樂
Jayalakshmi Sastri
Jayalakshmi Sastri
聲樂

歌詞

[Verse 1]
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
[Verse 2]
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
[Verse 3]
மையல் நடனம் செய்யும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக
[Verse 4]
ரஹண-பவச-ரரரர-ரரர
ரிஹண-பவச-ரிரிரி-ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிற நிற நிறென
ரஹண-பவச-ரரரர-ரரர
ரிஹண-பவச-ரிரிரி-ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிற நிற நிறென
[Verse 5]
வசுர ஹணபவ வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐய்யா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்
ஷண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
[Verse 6]
ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண-செககண-செககண-செகண
மொகமொக-மொகமொக-மொகமொக-மொகென
நகநக-நகநக-நகநக-நகென
டிகுகுண-டிகுடிகு-டிகுகுண-டிகுண
ரரரர-ரரரர-ரரரர-ரரர
ரிரிரிரி-ரிரிரிரி-ரிரிரிரி-ரிரிரி
டுடுடுடு-டுடுடுடு-டுடுடுடு-டுடுடு
டகுடகு-டிகுடிகு-டங்கு-டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேல் முந்து
[Verse 7]
எந்தனை ஆளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா-லாலா-லாலா-வேசமும்
லீலா-லீலா-லீலா-விநோதனன்
எந்தனை ஆளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா-லாலா-லாலா-வேசமும்
லீலா-லீலா-லீலா-விநோதனன்
உன் திருவடியை உறுதியென்று எண்ணும்
என் தலைவைத்து உன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்து இருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவை செவ்வேல் காக்க
[Verse 8]
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்ட குதத்தை வடிவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
[Verse 9]
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபி கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும் பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
[Verse 10]
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிக பேய்கள்
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிக பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளை பேய்களும்
பெண்களை தொடரும் பிரம்ம ராட்சசரும்
அடியனை கண்டால் அலறி கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டிய காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட
என் பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட
[Verse 11]
ஆணை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
ஆணை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழி போக்கும்
அடியனை கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனை கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓட
படியினில் முட்ட பாச கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிட கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிட கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
[Verse 12]
குத்து குத்து கூர் வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அதுவாக
விடுவிடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி தொடர்ந்து ஓட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்பும் சுளுக்கும் ஒதுதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
சூலை சயம் குன்மம் சொக்கு சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்பிரிதி
பக்க பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைதாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
[Verse 13]
எல்லாப் பிணியும் என்றனை கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
எல்லா பிணியும் என்றனை கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னை துதிக்க உன் திருநாமம்
சரஹண பவனே சையொளி பவனே
திரிபுர பவனே திகழ் ஒளி பவனே
பரிபுர பவனே பவம் ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியை
காத்து தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர் காமத்துறை கதிர்வேல் முருகா
[Verse 14]
பழநி பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் ஷண்முகத்து அரசே
பழநி பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் ஷண்முகத்து அரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நாவிருக்க யான் உனை பாட
எனை தொடர்ந்திருக்கும் எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன் அருளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொர்ணமும்
மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
[Verse 15]
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது உன் மனமகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டி கவசம் இதனை
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உரு கொண்டு
[Verse 16]
ஓதியே ஜபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக்கு உள்ளோர் அடங்களும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
ஓதியே ஜபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக்கு உள்ளோர் அடங்களும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர் கைவேலாம் கவசத்து அடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரை பொடி பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்குரு சங்காரத் தடி
அறிந்தெனது உள்ளம் அஷ்ட லக்ஷ்மிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாக
சூரபத்மாவை துணித்த கையதனால்
இருபத்தேழ்வர்க்கு உவந்து அமுதளித்த
குருபரன் பழநி குன்றினில் இருக்கும்
சின்ன குழந்தை சேவடி போற்றி
எனை தடுத்தாட் கொள்ள என்றன துள்ளம்
[Verse 17]
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மணமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் ஷண்முகா சரணம்
சரணம் சரணம் ஷண்முகா சரணம்
Written by: D.V. Ramani, Karpagadasan
instagramSharePathic_arrow_out

Loading...