Lyrics
அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே
என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே
யே வாடி வாடி ராட்டி என் நெஞ்சம் தாங்கலடி
உன்னை தேடி தேடி நானும் என் கண்ண மூடல டி
அழகா நீ பெஞ்ச மாமழை போல
அதுல நனைஞ்சேன் அடி உன் நினைப்பால
அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே
என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே
கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற
என்னோட உசுர நீ கட்டி இழுக்குற
காத்தாடி நூல போல் என மாத்துற
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற
ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற
உன்ன நெனைச்சு நெனைச்சு சொக்க வைக்குற
வாடி பொட்டபுள்ள அழகால கொல்லுறியே
பேச ஒன்னும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே
கனவா நெனவா கேக்க வெச்சாலே
அடடா மனச அத்துமீற செஞ்சாலே
அட எதுக்கு என்ன பாத்தேன்னு கேக்க வெச்சுட்டியே
என் உசுருக்குள்ள உம்பேர தான் எழுத வச்சுட்டியே
நீ தேடி வந்த ராட்டி
என்ன சிக்க வச்சுடியே
கண்ண மூடி மூடி உன்னப்பத்தி
பேச வச்சுடியே
எனக்கே தெரியாம நான் தொலஞ்சேனே
மனச கொடுத்து அட நான் கரஞ்சேனே
மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே
மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே
மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே
மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே
Writer(s): Mohanrajan, Santhosh Dhayanidhi
Lyrics powered by www.musixmatch.com