Lyrics
தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
நீயே தன் பூமி என்றதோ
குறுஞ்சிறகினில் பெருமலையினை
ஏன் ஏற்றினாய்
சுருங்கிடும் வானை காட்டினாய்
வெறும் குமிழியில் புது நிறங்களை
ஏன் ஊற்றினாய்
இருண்டிடும் உலகை தீட்டினாய்
எறும்புகள் நசுங்கும் போதிலும்
உயிருடன் தத்தி போகுதே
இருதயம் நொறுங்கும் போதிலோ
உயிர் எனை விட்டு போகுதே
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்
தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
நீயே தன் பூமி என்றதோ
உன் நெஞ்சில் நீந்தி வந்த காதல் வெண்ணிலா
மீண்டும் மேலேறி சென்றதோ
ராமன் செய்த போரே
சீதைக்காக தானே
ஆனால் என்ன போர் இது
உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய்
உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய்
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்
Writer(s): Madhan Karky Vairamuthu, Vishal Chandrashekhar
Lyrics powered by www.musixmatch.com