Lyrics
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே
இதயத்தை எதற்காக எதற்காக
இடம் மாற்றினாய்
இனிக்கும் ஒரு துன்பத்தை குடியேற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோயென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
அருகினில் வா அருகினில் வா
இடைவெளி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சருகம்
படைத்திட தவிக்குதே
மழை வெயில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அணைப்பினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறுப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
மரணமே பயந்திடும்
தூரத்தில் நாமும் வாழ்கின்றோம்
மனித நிலை தாண்டி போகிறோம்
இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ ஹோ பிரிவில்லையே
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
Writer(s): Vijay Antony, Thamarai
Lyrics powered by www.musixmatch.com