Kredity

PERFORMING ARTISTS
Naresh Iyer
Naresh Iyer
Performer
Anweshaa Dutta
Anweshaa Dutta
Performer
Radhan
Radhan
Performer
COMPOSITION & LYRICS
Radhan
Radhan
Composer
Muthamil
Muthamil
Songwriter

Texty

நி சா கரி சா கரி சா
நி சா கரி சா நி ப மா
நி சா கரி சா கரி சா மா பகரி
சொல்லட்டுமா ஒன்று சொல்லட்டுமா? என் கண்ணா, என் கண்ணா
கிள்ளுதடா உன் கண்கள் ரெண்டும் வந்து ஒன்னா ரெண்டும் ஒன்னா
நி சா கரி சா கரி சா
நி சா கரி சா நி ப மா
விழியின் ஓரம் உரிமையோட உறங்கும் உயிராக
இறந்து வாழ விரும்பினேனே உனது நாளாக
ஏதேதோ என்னை செய்தாய்
என்னடா என்னை செய்தாய்?
ஏதேதோ என்னை செய்தாய்
என்னடா என்னை செய்தாய்?
நி சா கரி சா கரி சா
நி சா கரி சா நி ப மா
நி சா கரி சா கரி சா மா பகரி
மலர்களோடு மலர்கள் கூட
மதங்கள் ஏது மறுத்து பேச
விரல்களோடு விரல்கள் சேர
கனவுதான் தினம் காண்கிறேன்
கனவென்றாலும் நினைவென்றாலும் எனக்கு நீயே உறைவிடம்
விழிகள் பேசும் மொழிகள் போதும் உயிரும் உறைந்திடுமே
தெறிக்கும் சிரிப்புகள் இதழ்கள் சிரித்திட வழிகள் பிறந்திடுமே
நி சா கரி சா கரி சா
நி சா கரி சா நி ப மா
நி சா கரி சா கரி சா மா பகரி
துடிக்கும் ஆசை பிறக்கும்போது
தெளிச்ச மேகம் பறிக்கத்தோன்றும்
சில நொடி இமை இமைக்கும்போது
சிறகுடன் நான் பறக்கிறேன்
உனது வாசல் கடந்துபோக உலக வேகம் குறைந்திடும்
உனது பார்வை உதிரும் போது இதயம் கரைந்திடுமே
உனது பாதையில் எனது காலடி உலகம் வழிவிடுமோ
ஏதேதோ என்னை செய்தாய்
என்னடா என்னை செய்தாய்?
ஏதேதோ என்னை செய்தாய்
என்னடா என்னை செய்தாய்?
Written by: Muthamil, R Muthamil Selvan, Radhan
instagramSharePathic_arrow_out

Loading...