Musikvideo
Musikvideo
Credits
PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
Performer
Saindhavi
Performer
Na. Muthukumar
Performer
Vijay
Actor
Amala Paul
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
Composer
Na. Muthukumar
Lyrics
Songtexte
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் எங்குதே
குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
என்தன் ஆழமானது இன்று வேறானது
வண்ணம் தூறனது வானிலே
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும்
வரையில் தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் என்று எதாகிறேன்
எதிர்க்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுகிறது வாணிலே
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில்
புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன்காலடி
நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்ப்பார்ப்பதும் ஏனடி
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் எங்குதே
குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
என்தன் ஆழமானது இன்று வேறானது
வண்ணம் தூறனது வானிலே
Written by: G. V. Prakash Kumar, Na. Muthukumar

