Lyrics

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு தாரதப்பு தேவயில்லை போடு ஆட்டம் போடு சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா எதுத்து நின்னா எவனும் தூசியிடா பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா ஆளு அம்பு சேனை எல்லாம் தேவயில்லை நீயும் நின்னா எதையும் வெல்வேன் இனிமேல் நானடா மீசைவச்ச தாயை போல பேசுகின்ற தெய்வம் நீயே எதிரே நிற்கும் இமயம் நீயடா எனை நானே பார்த்துக்கொள்ள கிடைத்தாயே நீயும் இங்கே அதனாலே தானோ உன்மேல் தனி பாசம் உனக்குள்ளே என்னை நீயும் அடைகாக்கும் அன்பை பார்த்து வருங்கால நட்பும் கூட நம்மை பேசும் சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா எதுத்து நின்னா எவனும் தூசியிடா வீர தீர சூரர்கெல்லாம் வேர்த்து போகும் உன்னை கண்டால் உன்னை போல் இல்லை ஒருவன் மண்ணிலே நாடு வீடு காடு எல்லாம் நான் கடந்து போனால் கூட தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே உயிர் என்று உன்னை நானே ஒரு நாளும் சொல்ல மாட்டேன் உயிர் என்றால் என்றோ ஓர் நாள் பிரிவாயே ஒருபோதும் உன்னை நானும் விடமாட்டேன்தோற்றுபோக ஜெய்போமே நாமே இந்த புவிமேலே சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா எதுத்து நின்னா எவனும் தூசியிடா பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு தாரதப்பு தேவயில்லை போடு ஆட்டம் போடு சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா எதுத்து நின்னா எவனும் தூசியிடா
Writer(s): Yugabharathi, D Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out