Credits
COMPOSITION & LYRICS
Janarthanan Pulenthiran
Songwriter
Uma Devi Kuppan
Songwriter
Lyrics
வாழ்வானவன்
வழி நீங்கியே
நூறாயிரம்
வலியாகிறான்
வேர்கள் தேடி
தீகள் பாயும்
வேட்கை யாவும்
பாழாய் போகும்
உனையே கேட்டே
நெஞ்சம் போராடும்
கூடானேன் உயிர் நீங்கிய
கூடானேன் உனைத்தேடிடும்
கூடானேன் எனைத் தேற்றிட
கருணை கொஞ்சம் தருவாய்
கூடானேன் உயிர் நீங்கிய
கூடானேன் உனைத்தேடிடும்
கூடானேன் எனைத் தேற்றிட
கருணை கொஞ்சம் தருவாய்
கனவுகள் கண்ணீராகிறதே
காதலன் பொய்யன் ஆனதனால்
காதல் யாவிலும்
உந்தன் காயம்தான்
துரோகம் தந்துப்போவதில்
உனக்கென்ன சுகமோ
கடல்தேடும் ஆறாய் நானானேன்
கூடானேன் உயிர் நீங்கிய
கூடானேன் உனைத்தேடிடும்
கூடானேன் எனைத் தேற்றிட
கருணை கொஞ்சம் தருவாய்
கூடானேன் உயிர் நீங்கிய
கூடானேன் உனைத்தேடிடும்
கூடானேன் எனைத் தேற்றிட
கருணை கொஞ்சம் தருவாய்
வாழ்வானவன் வழி நீங்கியே
தினம் தினம்
உயிரும் குமிறிடுதே
நினைவென்னும்
கழுவில் செருகிடுதே
பாய்ந்து வேகிறேன்
காதல் தீயிலே
நாமும் சேர்ந்து வாழவே
உனைக்கேட்குது உயிரே
வேரானாய் நீயே வேறானாய்
வாழ்வானவன்
வழி நீங்கியே
நூறாயிரம்
வலியாகிறான்
வேர்கள் தேடி
தீகள் பாயும்
வேட்கை யாவும்
பாழாய் போகும்
உனையே கேட்டே
நெஞ்சம் போராடும்
கூடானேன் உயிர் நீங்கிய
கூடானேன் உனைத்தேடிடும்
கூடானேன் எனைத் தேற்றிட
கருணை கொஞ்சம் தருவாய்
கூடானேன் உயிர் நீங்கிய
கூடானேன் உனைத்தேடிடும்
கூடானேன் எனைத் தேற்றிட
கருணை கொஞ்சம் தருவாய்
Written by: Janarthanan Pulenthiran, Uma Devi Kuppan

