Lyrics
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
என் ஆசை நிறைவேறுமா
என்தோழி நீயும் சொல்லம்மா
நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
உன்னை நான் சுமப்பதினால்
இதயமும் கருவறை தான்
மனதால் நானும் அன்னையே
மறவேன் என்றும் உன்னையே
நான் பாலைவனத்தில் விதை போல்
நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே
உன் விழி திறந்திருந்தால்
விடியலே தேவை இல்லை
உன்னை நான் துறந்திருந்தால்
உயிர் அது சொந்தம் இல்லை
இத்தனையும்
இனி கிடைக்குமா
கிடைக்கும்
கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஏன் இந்த பிறவி என்று
இது வரை நினைத்திருந்தேன்
உயிரே உன்னை பார்த்ததும்
உலகே புதியதானதே
என்னை படைத்த அந்த தெய்வம்
என்னை சுமந்த அன்னை தெய்வம்
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்
பருவங்கள் ஓடி போகும்
உருவங்கள் மாறி போகும்
உன் மீது கொண்ட காதல்
உயிரையும் தாண்டி வாழும்
சொன்னதெல்லாம்
இனி நடக்குமா
நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
என் ஆசை நிறைவேறுமா
என்தோழி நீயும் சொல்லம்மா
நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
Writer(s): Deva, Velam C Manohar
Lyrics powered by www.musixmatch.com