Letra

புலியும் அவ்வேடனும் புயலும் ஒரு ஓங்களும் புனலும் மடைவாயிலும் புழமும் பெரும் பூக்காயும் புலரும் இருள் வானமும், oh நட்பாய் (நட்பாய்) எங்காகிலும் பார்த்தது உண்டோ? தீ நீருடன் சேர்ந்தது உண்டோ? யார் யாரினை விழும்புவர் என்பதை சொல்வார் உண்டோ? தரதம் தரதம் தரதம் தம் தரதம் தரதம் தரதம் தம் தரதம் தரதம் தரதம் தம் தம் தர தம் தம் தம் கழுத்தேரிய கையிரோடு நட்பாய் கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய் கனவும் ஒரு விழிபுனர்வும் கரம் கூடிய கதை உண்டோ? தரதம் தரதம் தரதம் தம் தரதம் தரதம் தரதம் தம் தரதம் தரதம் தரதம் தம் தம் தர தம் தம் தம் பசியாறும் பகைவனை கண்டு மனம் இங்கு மகிழ்வது ஏனோ? விழியோர கானல் கண்ணீரில் பொய்யும் மெய்யாகுதோ? தரையில் தன் நிழலினை கொண்டு அதை தேடி அலைவது ஏனோ? அறியாமையாலே மண் எங்கும் இன்பம் உண்டாகுதோ? ஈர் எதிர் உருவங்கள் இணையும் என்றே இயற்பியல் எழுதியதோ? ஈர் எதிர் பயணங்கள் இணையும் என்றே இதயங்கள் எழுதியதோ? எங்காகிலும் பார்த்தது உண்டோ? தீ நீருடன் சேர்ந்தது உண்டோ? யார் யாரினை விழும்புவர் என்பதை சொல்வார் உண்டோ? தரதம் தரதம் தரதம் தம் தரதம் தரதம் தரதம் தம் தரதம் தரதம் தரதம் தம் தம் தர தம் தம் தம் கழுத்தேரிய கையிரோடு நட்பாய் கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய் படையும் அதன் குறிஇலக்கும் உறவாடிய கதை உண்டோ? வழிந்தோடும் எரிமலைச்சாறு கடலோடு கலந்திடும் போது வெளியேறும் ஆவி யார்கொண்ட வெற்றி என்றாகுமோ? கருங்காட்டை கிழித்திடும்மாறு மரவேர்கள் அறுத்திடும் போது கடையாகும் பாதை யார்கொண்ட தோல்வி என்றாகுமோ? கேள்வியை துணையென விடையும் சேர்ந்தே தேடலை தொடர்கிறதோ? ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையில் இங்கே முடிவிலி படர்கிறதோ? எங்காகிலும் பார்த்தது உண்டோ? தீ நீருடன் சேர்ந்தது உண்டோ? யார் யாரினை விழும்புவர் என்பதை சொல்வார் உண்டோ? தரதம் தரதம் தரதம் தம் தரதம் தரதம் தரதம் தம் தரதம் தரதம் தரதம் தம் தம் தர தம் தம் தம் கழுத்தேரிய கையிரோடு நட்பாய் கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய் களிறும் ஒரு சிற்றெம்பும் விளையாடிய கதை உண்டோ?
Writer(s): Maragathamani, Madhan Karky Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out