क्रेडिट्स
PERFORMING ARTISTS
T. M. Soundararajan
Lead Vocals
Kannadasan
Performer
COMPOSITION & LYRICS
K. V. Mahadevan
Composer
Kannadasan
Songwriter
गाने
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
Written by: K. V. Mahadevan, Kannadasan