クレジット

PERFORMING ARTISTS
C. Sathya
C. Sathya
Performer
COMPOSITION & LYRICS
C. Sathya
C. Sathya
Composer
Karthik Netha
Karthik Netha
Songwriter

歌詞

தாமிரபரணியில் நீந்தி வந்த
என் ஆழம் பூவிலே
ஆயிரம் கனவ நீ வெதச்சுப்புட்டு
கை வீசி போறவளே
கரட்டு காட்டுக்குள்ள
முளைச்ச நெல்ல போல
மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச
எதுக்கு குத்த வச்ச
மனச பத்த வச்ச
கொசுவம்போல என்னை பின்ன வச்சு முடியரியே
பெருக்கா முழியே
அடியே உருவாஞ்சுருக்கே
பத்து பனிரெண்டு மணி வரை நானும்
கண்டபடி திரிஞ்சேன்
பொட்ட புள்ள இவ பாத்துட்டு போனா
பொட்டிக்குள்ள அடஞ்சேன்
ஒத்த துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி
இஷ்டப்படி கிடந்தேன்
ஒட்டுக்கன்னி இவ சிரிச்சுட்டு போனா
எட்டு முறை குளிச்சேன்
மருதாணி இலை போல என் மனச நெசக்குற
அருக்கானி அழகாத்தான் என் உசுரில் குளிக்குற
ராட்டின தூரிய போல என்னை அடி ஏண்டி உருள விட்ட
பொள்ளாச்சி சூட்டு தச்சு
கண்காட்சி பாக்கையில
அன்னாசி பழம்போல என்னை வெட்டி தின்ன அடி
அடியே கொடுவா நுனியே
அடியே கருவா உளியே
சல்லி பய இவன் மனசுல நீ தான்
மல்லிச்செடிய வச்ச
ஓட்டக்காசு என்னை உருப்படியாக்கி
நெஞ்சுக்குழியில் வச்ச
அடி போடி
உன்ன பாத்தா
ஒரு கிறுக்கு புடிக்குதே
தல மேல
ஒரு மேகம்
அட தமுக்கு அடிக்குதே
கோழிய போல என் உறக்கத்த நீ அடி வெரசா முழுங்குறியே
வித்தார கள்ளி உன்ன
கொத்தாக அள்ளி வந்து
பொத்தானப்போட்டு ச்சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா
கனியே தனியே
அருவா முழுங்கும் விழியே
Written by: C Sathya Moorthy, C. Sathya, Karthik Netha
instagramSharePathic_arrow_out

Loading...