Nadchodzące koncerty z udziałem Sonu Nigam & Swetha
Sonu Nigam – Najpopularniejsze utwory
Podobne Utwory
Kredyty
PERFORMING ARTISTS
Sonu Nigam
Performer
Swetha
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
Composer
Na.Muthukumar
Lyrics
Tekst Utworu
கண்ணோடு கண் சேரும் போது
வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால்
என் நெஞ்சம் குழந்தை ஆகும்
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே
வழியில் உன் வழியில்
வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே
உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன்
ஒ... தோள் சாய்கிறேன்
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே
வழியில் உன் வழியில்
வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே
இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையில்
சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன்
வழியினில் ஏனோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்
விழியில் உன் விழியில் வந்து
விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே
வழியில் உன் வழியில் வந்து
நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே
சிரிப்பிலே உன் சிரிப்பிலே
சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்ந்தாலும்
மௌனங்கள் கூட பிடிக்கிறதே
என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று உயிர் சொன்னதே
வழியில் உன் வழியில்
வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே
உன்னோடு வழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன்...
ஒ தோள் சாய்கிறேன்
விழியில் உன் விழியில் வந்து
விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று
உயிர் சொன்னதே
Writer(s): Na.muthukumar, G.v.prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com