Lyrics
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்
யார் என்று நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன்பேரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்
சாலையில் நீ போகையில
மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்
காலையில் உன்னை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி
அதிருதே என் ஆறடி
ஒரு கார்பன் கார்டு என கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே
என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே நீ போனாலே
என் வாழ்நாள் சொற்பமே
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்
பூவிலே செய்த சிலை அல்லவா
பூமியே உனக்கு விலையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரமல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால்
காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறுநொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவித்தான்
என் பொழுதும் விடிந்ததே
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்
யார் என்று நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன்பேரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்
Writer(s): D Imman, Viveka, Samyu Mohan
Lyrics powered by www.musixmatch.com