Lyrics
வல்லவா என்னை வெல்லவா
கொஞ்சம் கொல்லவா
நெஞ்சை அள்ளவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும்
பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே
உள்ளம்தான் வாடுதே
சந்தோஷத்தில் தள்ளாடுறேன்
கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நான் கொண்டாடுறேன்
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்
வல்லவா என்னை வெல்லவா
கொஞ்சம் கொல்லவா
நெஞ்சை அள்ளவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா
என் நெற்றி மீது
உன் வேர்வை சிந்தி
ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்
உன் மூச்சு காற்று
வெப்பத்தை சேர்த்து
மூழ்கும் முன்னே என்னை மீட்டு விடும்
வெளித் தோற்றம் தரும் காதல் யாவும்
சில நாளே வரும் மாயம் ஆகும்
அடி நெஞ்சில் சென்று குடி ஏறும்
குணம்தானே பல யுகம் வாழும்
நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை
என ஒரு நாடகம் நடிப்பேன்
வல்லவா வல்லவா
ஏமாந்து போனேன்
ஏமாந்து போனேன்
தென்றல் என்றே உன்னை எண்ணிவிட்டேன்
நீ என்னை சூழ்ந்து
ஆட்கொண்ட போது
புயலென்று உன்னை கண்டு கொண்டேன்
என்னோடு நீ இருக்கும் போது
பொருள் இல்லா பல சண்டை தோன்றும்
எனதறையில் உள்ள சுவர் நான்கும்
வித விதமாய் உன் படம் தாங்கும்
காலம் பல கடந்தது கடந்தது
உறவிது உறவிது கண்ணா
யாரும் இதை பிரித்திட நினைத்திட
உடல் மட்டும் உலவிடும் கண்ணா
வல்லவா என்னை வெல்லவா
கொஞ்சம் கொல்லவா
நெஞ்சை அள்ளவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும்
பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே
உள்ளம் தான் வாடுதே ஏஏஏ ஏஏ
சந்தோஷத்தில் தள்ளாடுறேன்
கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நான் கொண்டாடுறேன்
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்
வல்லவா வெல்லவா
கொல்லவா அள்ளவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா
Writer(s): Yuvan Shankar Raja, Thamarai
Lyrics powered by www.musixmatch.com