積分
演出藝人
Kabilan
演出者
Ranjin Raj
演出者
Pradeep Kumar
演出者
Saindhavi Prakash
演出者
詞曲
Kabilan
詞曲創作
Ranjin Raj
作曲
Devi Sri Prasad
作曲
Palani Barathi
詞曲創作
歌詞
கடவுள் தந்த கவிதை போல
உனை நான் பார்க்கிறேன்
இதற்கும் மேலே என்ன வேண்டும்
என்னை நான் கேட்க்கிறேன்
இரு விழியில் இதயம் தூங்க
தினசரியும் கனவை வாங்க
இனி இவளின் இரண்டாம் பாகம் நீ அல்லவா
பேசும் மழையே ஹோ நனைய வரவா
பூவின் இதழாலே உனைய வரவா
சாலை நிழல்போலே அலைந்து விடவா
மாலை நிலவோடு தொலைந்து விடவா
உன் கண்களும் என் பாதமும்
பயனம் தீராத தொடரும் கதை ஆகும்
உன் சீண்டலும் என் தீண்டலும்
மௌனம் கொள்ளாத கடலின் அலையாகும்
நீரோடு போகும் மேகம் யாரோடு பேசி போகும்
அறியாது அந்த ஆகாயம்
நான் பாடும் ஆரிராரோ
நீ இன்றி வேரு யாரோ
என் ஜீவன் உன்னால் வாழாதோ
எனக்கே எனக்கே இது போதும் போதுமே
உன் நெஞ்சமும் என் தஞ்சமும்
ஒரு நாள் பிரியாத உயிரின் இசையாகும்
வேரோடு நீரை போல ஒன்றோடு ஒன்றாய் சேர
விதையாக உன்னில் தொலைந்தேனே
ஈரைந்து மாதம் தானே
தாயோடு யாதும் மானே
அதன் பின்னே நானே நீயானேன்
எனக்கே எனக்கே அது போதும் போதுமே
கடவுள் தந்த கவிதை போல
உனை நான் பார்க்கிறேன்
இதற்க்கும் மேலே என்ன வேண்டும்
என்னை நான் கேட்க்கிறேன்
இரு விழியில் இதயம் தூங்க
தினசரியும் கனவை வாங்க
இனி இவளின் இரண்டாம் பாகம் நீ அல்லவா
பேசும் மழையே ஹோ நனைய வரவா
பூவின் இதழாலே உனைய வரவா
சாலை நிழல்போலே அலைந்து விடவா
மாலை நிலவோடு தொலைந்து விடவா
Written by: Devi Sri Prasad, Kabilan, Palani Barathi, Ranjin Raj

