Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Bombay Jayashri
Bombay Jayashri
Lead Vocals
COMPOSITION & LYRICS
Thamarai
Thamarai
Songwriter
Harris Jayaraj
Harris Jayaraj
Composer

Lyrics

[Chorus]
வசீகரா, என் நெஞ்சினிக்க
உன் பொன்மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன்ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
[Chorus]
வசீகரா, என் நெஞ்சினிக்க
உன் பொன்மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன்ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
[Verse 1]
அடைமழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு-குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும்கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
[Chorus]
வசீகரா, என் நெஞ்சினிக்க
உன் பொன்மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன்ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
[Chorus]
தீரும் தீரும்
[Verse 2]
தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலைதுடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை
நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே
[Chorus]
வசீகரா, என் நெஞ்சினிக்க
உன் பொன்மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன்ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
Written by: Harris Jayaraj, Thamarai
instagramSharePathic_arrow_out

Loading...