Lyrics
பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நேகமே
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன ஸ்நேகமே
தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள ஞாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டி கொள்ள சொந்தம் இல்லை
வாசனை தீண்டிட நினைக்கிறாய்
அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே
மழை உறவுடன் சேர்வதில்லை
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
இதய கூட்டை பூட்டிக் கொண்டு
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்
வருஷங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில் மலர்வதுண்டு
பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நேகமே
விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
Writer(s): G. V. Prakash Kumar, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com